சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே அமராவதி புதூரில் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர்  கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி சாரதேஸ்வரி ஆசிரமம் யோகேஸ்வரி ஸ்ரீ மீராபுரி மாதாஜி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு ஆன்மீகம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்து பூஜையை நடத்தி ஆசி வழங்கியுள்ளார்.

மேலும் அருள் சகோதரிகள் யத்தீஸ்வரி சாரீஸ்வரி பிரியா அம்பா மற்றும் யத்தீஸ்வரி ராமகிருஷ்ண பிரியா அம்பா ஆகியோர் பாத பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் 150 -க்கும் மேற்பட்ட மாணவிகள் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.