விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலகிராமத்தில் முகமது ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூட்டேரிப்பட்டில் இருக்கும் மெத்தை தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கூட்டேரிப்பட்டு அண்ணாநகர் பகுதியில் முகமது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு மனைவியுடன் சென்ற முகமது நேற்று வீட்டிற்கு திரும்பினார். அப்போது கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் தீயில் இருந்து கொண்டிருந்ததை கண்டு முகமது அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 10 பவுன் தங்க நகை, 1 1/2 கிலோ வெள்ளி பொருட்கள், ஐந்தாயிரம் ரூபாய் பணம், பட்டு சேலைகள் ஆகியவற்றை திருடிவிட்டு வீட்டிலிருந்த பொருட்களுக்கு தீ வைத்து விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.