கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள், மாதிரி தேர்வுகள், வினாத்தாள்கள், பாடக்குறிப்புகள் ஆகியவற்றை www.tamilnadu careerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதனையடுத்து கல்வி தொலைக்காட்சியில் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல், நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. இதன் மறுஒளிபரப்பு இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரை இருக்கும். எனவே போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வாலிபர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.