பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கிறிசான்‌ பெரைரா (27). இவர் சமீபத்தில் சார்ஜாவுக்கு சென்ற போது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சார்ஜா சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து நடிகையின் தாயார் பிரமிளா தன் மகளை சிக்க வைப்பதற்கு சதி நடந்துள்ளது என கூறி மும்பை போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து மும்பை போலீசார் நடத்தி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது மும்பையைச் சேர்ந்த அந்தோணி பால் மற்றும் ரவி ஆகியோர் பிரமிளாவை பழி வாங்குவதற்காக அவருடைய மகளை போதைப் பொருள் வழக்கில் சிக்க வைத்துள்ளனர்.

இவர்களில் அந்தோணி என்பவர் பேக்கரி கடை நடத்தி வந்துள்ளார். சர்வதேச வலைதளத் தொடர் விளம்பரத்திற்காக கிறிசானை ஐக்கிய அரபு அரபு அமீரகம் அனுப்ப  திட்டமிட்டு விமான நிலையத்தில் வைத்து போதை பொருள் வைக்கப்பட்ட ஒரு கோப்பையை அவரிடம் கொடுத்துள்ளனர். இதேபோன்று வேறு 4 பேரையும் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதற்கு பால் திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை கிறிசான் தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக அவருடைய சகோதரர் தெரிவித்துள்ளார். தான் சிறையில் அனுபவித்த துன்பங்கள் குறித்து நடிகை கிறிசான் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் சிறையில் ஒரு பேப்பர் மற்றும் பேனா கிடைப்பதற்கு 3 வாரங்கள் ஆனது. அங்கு என்னுடைய தலை முடியை டிடெர்ஜென்ட் பவுடர் போட்டு தான் அலசினேன். கழிவறை நீரில் தான் காபி போட்டு குடித்தேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் அவருடைய பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.