பொது இடங்கள் மற்றும் பெயர் பலகைகளில் சுவரொட்டி ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மாநகராட்சி கட்டிடங்கள், பேருந்து நிறுத்த நிழல் கூடங்கள் உட்பட பொது இடங்களில் சுவரொட்டிகள் மாநகரின் அழகை சீர்குலைக்கும் வகையில் உள்ளன என்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டு சென்னை மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி 15 மண்டலங்களிலும் சுவரொட்டி ஒட்டிய நபர்களுக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்கள் மற்றும் பெயர் பலகைகளில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.