திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு துணை மின் நிலையத்தில் 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதியில் மின்தடை ஏற்படும். தண்டராம்பட்டு, ராதாபுரம், தாழனோடை, தென்முடியனூர் ஆகிய கிராமங்களிலும் மற்றும் தானிப்பாடி, சாத்தனூர், கொட்டையூர், மலையனூர் செக்கடி மற்றும் பெருங்குளத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும். இத்தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் ராஜஸ்ரீ தெரிவித்துள்ளார்.