ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அவசர சிகிச்சைக்காக குழந்தையை ஏற்றி சென்ற ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற கார் ஓட்டுனரின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த காட்சியை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் செல்லும் வாகனங்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தும் இது போன்ற அலட்சியமாக நடத்துக் கொள்ளும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.