சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் காவல் நிலைய சுற்று சுவரை ஒட்டி சுமார் 4 ஆண்டுகளாக குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார்கள் தீப்பிடித்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.