கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் சப்-கலெக்டராக லூர்துசாமி என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று சப்- கலெக்டர் லூர்துசாமி, அலுவலக உதவியாளர் கர்ணன் ஆகியோர் அலுவலகம் வேலை காரணமாக அரசு காரில் கடலூருக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த காரை வீரவேல் என்பவர் ரொட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வடலூர் சிப்காட் அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக வீரவேல் காரை திருப்பி உள்ளார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சப்- கலெக்டர் லூர்துசாமி, அலுவலக உதவியாளர் கர்ணன், வீரவேல் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தவர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.