கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் முத்தையா நகர் வள்ளலார் தெருவில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை ரமா சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பி.முட்லூர் பகுதியில் வைத்து முன்னால் சென்ற லாரி டிரைவர் சடன் பிரேக் பிடித்ததாக தெரிகிறது.

இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ரமா ஓட்டி சென்ற கார் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.