காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் படிக்கட்டுகளை ஒட்டி இருக்கும் ஜன்னல்கள் தகரம் கொண்டு அடைக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தொங்கிக்கொண்டே பேருந்தில் பயணம் செய்வதை தடுப்பதற்காக இந்த புதிய முயற்சி எடுக்கப்படுகிறது. அடிக்கடி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்வதால் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் நடக்கிறது.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் சிலர் அதனை கண்டு கொள்வதில்லை. இதனால் காஞ்சிபுரம் பணிமனையில் இயக்கப்படும் அரசு பேருந்து படிக்கட்டுக்கு அருகே இருக்கும் ஜன்னல்களை தகரத்தை கொண்டு மூடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.