தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இரண்டு பேர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.