கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலம்- நெல்லிக்குப்பம் முக்கிய சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. ஆனால் அந்த சாலை மேடு பள்ளமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அதிவேகமாக வாகனங்கள் வந்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இந்நிலையில் பேட்ச் ஒர்க் மூலம் அந்த சாலை சரி செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.