கரூர் மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அம்பேத்கர் நகரை சேர்ந்த தினேஷ் என்பதும், மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்களை கடத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தினேஷை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.