வேலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் நிலையத்திற்கு எல்லை உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஐயப்பன் என்பவர் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஐயப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஐயப்பனை சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஐயப்பன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.