ஈரோடு-திருநெல்வேலி விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ரயில்வே வாரியம் ஈரோடு- நெல்லை விரைவு ரயில் (16845) சேவையை செங்கோட்டை வரை நீடிக்க ஒப்புதல் அளித்தது.

அதன்படி ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு ரயில் புறப்படும். பின்னர் இரவு 11.15 மணிக்கு செங்கோட்டையை வந்தடையும். இதனையடுத்து செங்கோட்டையிலிருந்து காலை 4.50 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 3 மணிக்கு ஈரோட்டை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.