செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் முன்னேற்ற படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி , நீங்க ஒரு அக்யூஸ்ட். நீங்க பாலியல் குற்றவாளி. விஜயலட்சுமி  கணித்தன்மை இழந்து இருக்காங்களான்னு மருத்துவமனையில் பரிசோதனை செஞ்சிருக்காங்க…  11 வருஷத்துக்கு முன்னாடி கன்னித்தன்மை இழந்தாலும்,  இழப்புதான்.

நூறு வருஷத்துக்கு முன்னாடி கன்னித்தன்மை இழந்தாலும்,  அது இழப்புதான்னு கண்டுபிடிச்சிடுவாங்க. அப்ப  கன்னித்தன்மை இழந்து இருக்காங்கன்னு அவங்க சொல்றாங்க இல்ல…  அவங்க முதன்முதல்ல கன்னித்தன்மை எங்கே இழந்தாங்கன்னு சொல்றாங்க… மீடியா முன்னாடி சொல்றாங்க…

மதுரையில இருக்கின்ற அந்த ஹோட்டல்ல… இவுங்க மாலை மாத்திக்கிட்டது… அன்னைக்கு நைட்டு கன்னித்தன்மையை சீமான் அவர்களால் இழந்து இருக்காங்க….  என்னால இல்லைன்னு சீமான் அவர்கள் சொல்ல சொல்லுங்க ? அவரால வெட்ட வெளிப்படையா சொல்ல சொல்லுங்க….  என்னால கன்னித்தன்மை இழக்கலைன்னு சொல்ல சொல்லுங்க… சொல்ல முடியாது… பத்து பேர் வந்தாங்க…  சிங்கமும், புலியும் தனியா தான் தனித்து நிற்கும். பன்னிங்க தான் கூட்டமா வரும்.

நான் சிங்கம், புலி.  நான் புலி . அதனால தான் தனியா களம் ஆட வந்திருக்கேன். நான் அவங்க கூட்டிட்டு வந்த மாதிரி பத்து பேர கூட்டிட்டு வந்தேன்னா…. என்ன ஆகி இருக்கும் ? என் தம்பிங்க வந்தானுங்கன்னா….  ஒருத்தரும்  உள்ள இருந்து வெளியே போயிருக்க முடியாது.. நாங்க சட்டத்தை மதிக்கிறோம்… சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறோம்… காவல்துறை முன்பாகவோ,  ஊடகவியலாளர் முன்பாகவோ  என்னை என்ன என்ன  பேசினாங்கன்னு உங்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.