டிசம்பர் 1, 2, 3, 4 சென்னை முதல் கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. டிசம்பர் 3இல்  திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும்,  4ஆம் தேதி திருவள்ளூர், சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும்,  அவ்வப்போது 80 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று  வீசும் என எச்சரித்துள்ளது.