சென்னை மாநகராட்சி தனது பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லியன் லிட்டர் என்ற அளவில்  பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை தொடர்ச்சியாக உறுதி செய்து வருகிறது. அதே போல் 300 இடங்களில் இருந்து தினசரி தண்ணீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வக சோதனை செய்வதன் மூலம் கடுமையான தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர் விநியோக நிலையங்களில் ப்ளீச்சிங் பவுடர், படிகாரம் மற்றும் சுண்ணாம்பு போன்ற அத்தியாவசிய சேர்க்கைகள் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர்.

மழைநீர் சேகரிப்பு மற்றும் குடிநீர் விநியோக நிலையங்களில் பெரிய மற்றும் சிறிய பம்புகள் மற்றும் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி தேங்கிய நீர்கள் இறைக்கப்பட்டு திறமையாக நிர்வகிக்கப்படுகிறது. நீர் விநியோக நிலையங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மணல் மூட்டைகளை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வது பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடங்கும்.

மேலும் நீர் வாரியம் அதன் தலைமை அலுவலகத்தில் 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறையை இயக்குகிறது, அதன்படி 044-45674567 மற்றும் கட்டணமில்லா எண் 1916 மூலம் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் தொடர்பான புகார்களை  தெரிவிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.