வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நாளை மறுநாள் புயலாக வலுப்பெற உள்ள நிலையில் சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்று வேகமாக வீச கூடும் என்பதால் மீனவர்களும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.