தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் இருபதாம் தேதிக்குள் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் தொடங்கி வைத்த ஐந்து நாட்களுக்குள் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதனால் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு நாளை முதல் புதிய கணக்கை தொடங்கவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.