2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில், தகுதியிருந்தும் உரிமைத் தொகைப் பெற முடியாத குடும்பத் தலைவிகளின் கோபம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். நேற்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக நூற்றாண்டு பொன்விழா மாநாடு மதுரை அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

அதன்பிறகு செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவர்,  இந்த தொகையைப் பெறுவதற்கு தகுதி என்று பார்த்தால், ஆயிரம் ரூபாயை பெறுவதற்கு 1008 கண்டிஷன். முழுக்க முழுக்க இந்த ஆயிரம் ரூபாய் என்பது, அவர்கள் நிர்ணயிக்கின்ற தகுதியுடைய குடும்பங்கள் என்றால், திமுக  உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களும், மாவட்டச் செயலாளர்கள் அடையாளம் காட்டும் நபர்களுக்கும்தான் என்றார்.