தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் விடுமுறை இல்லாத ஆறு மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்பதால் மாணவர்கள் குடை மற்றும் ரெயின் கோட்டுடன் பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.