தமிழகத்தில் கனமழை எதிரொலியாக எட்டு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்வதால் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.