100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு உயர்த்தி வழங்கிய சம்பளம் ஏப்ரல் 2-ஆம் தேதி முதலே அமலுக்கு வரும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஊதியம் நாளொன்றுக்கு ரூ.281-ல் இருந்து ரூ.294 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இனி 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பணிகள் கிடைக்கும் எனவும் அமைச்சர் கூறினார்.