தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் திருக்கோயில் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி, முதல்வர் ஸ்டாலின் காசோலை வழங்குகிறார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 3000-ல் இருந்து ரூ.4000ஆகவும், திருக்கோயில் பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.1500ல் இருந்து ரூ.2000ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.