தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான உதவி மையங்கள் செயல்பட தொடங்கியது. ஆனால், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் இணையதளத்திற்கு சென்றதால் சர்வரில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வந்த பெண்கள், காலை 10 மணி முதல் காத்திருந்தும் விண்ணப்பிக்க முடியவில்லை எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்கின்றனர்