கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நாட்டில் பல மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. என்னிடையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை பஞ்சாப் அரசு உயர்த்தியுள்ளது. இந்த பாட் வரி உயர்வால் பஞ்சாபில் ஒரு லிட்டர் பெட்ரோல் 98.65 ரூபாய்க்கும், டீசல் 88.95 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலை குறையும் என்று செய்தி வெளியான நிலையில் பஞ்சாபில் தற்போது தலைகீழாக விலை உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.