சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள்நல மருத்துவமனையில் மருந்தாளுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு பணிக்கு வந்த ராஜன், மருந்து வழங்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை கைப்பற்றி போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால், மருத்துவமனை முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.