அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் நேற்று இரவு நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் சீரானதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில், பரிசோதனைகளையும் முடித்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.