மணிப்பூரில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்..

மணிப்பூரில் பாதுகாப்புபடையினருடனான சண்டையில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொதுமக்களுக்கு எதிராக அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தும் இந்த பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான பதிலடி மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளில், இந்த பயங்கரவாதிகளில் சுமார் 30 பேர் வெவ்வேறு பகுதிகளில் கொல்லப்பட்டுள்ளனர். சிலர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் என் பிரேன் சிங் கூறினார்..