பஞ்சாபில் 12 வயது சிறுமி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் பக்வாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு சனிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமானது சிறுமி தெரியவில்லை.

பின்னர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனைக்கு வந்தபோது, ​​மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். தற்போது சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. கடந்த காலங்களில் தான் வன்புணர்வு செய்யப்பட்டதாக சிறுமி தெரிவித்துள்ளார்.