970 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றம் திறந்து வைத்த பிரதமர் மோடி இந்த நாளை நினைவு கூறும் விதமாக 75 ரூபாய் நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலையை வெளியிட்டார். ‘

இந்த 75 ரூபாய் நாணயம் வெள்ளி, காப்பர், நிக்கல் மற்றும் துத்தநாகத்தால் செய்யப்பட்டுள்ளது. 35 கிராம் எடையுள்ள நாணயத்தில் அசோகர் ஸ்தூபியும் நாடாளுமன்ற கட்டிடமும் பொறிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நிகழ்வை நினைவு கூறும் விதமாக வெளியிடப்பட்டதால் இது மக்கள் பயன்பாட்டுக்கு வராது எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த நாணயங்கள் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் அமைந்துள்ள நான்கு இந்திய அரசாங்க அச்சகங்களில் தயாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.