தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் மக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் நெல்லை, தூத்துக்குடி மற்றும் மதுரை ஆகிய தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை தாம்பரம் மற்றும் நெல்லை இடையே ஜனவரி 11, 13, 16 ஆகிய தேதிகளிலும், நெல்லை மற்றும் தாம்பரம் இடையே ஜனவரி 12, 14, 17 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.