ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி செய்த வழக்கில் பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷ்-க்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆருத்ரா இயக்குநர் ஹரீஷிடம் நடத்திய விசாரணையில் ஆர்.கே.சுரேஷ்-க்கு தொடர்பு இருப்பதும், இருவருக்கும் இடையே பணப் பரிவர்த்தனை நடந்ததும் தெரியவந்துள்ளது. இதனால், ஆர்.கே.சுரேஷை கைது செய்து விசாரிக்க போலீஸ் திட்டமிட்டிருந்தாக நிலையில், அவர் துபாய்-க்கு தப்பி சென்றுள்ளார்.