படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், வதோதரா நகரில் உள்ள ஹரணியில் உள்ள மோட்நாத் ஏரியில் தனியார் பள்ளியை சேர்ந்த குழந்தைகள் படகு சவாரி அழைத்துச் செல்லப்பட்டனர். மொத்தம் 23 பள்ளி குழந்தைகளும் 4 ஆசிரியர்களும் படகில் சென்றுள்ளனர். எதிர்பாராத விதமாக படகு மூழ்கி 2 ஆசிரியர்கள் 10 குழந்தைகள் என 12 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்புப் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. லைஃப் ஜாக்கெட் அணியாததுதான் உயிரிழப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.