கடந்த இரண்டு வாரமாக வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை இரண்டு டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறையுமென்று மக்களுக்கு நிம்மதியான செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும் நாளை தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் ஏப்ரல் 13 முதல் 3 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.