சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது 525 கோடி மோசடி செய்துள்ளதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன், 25 ஆண்டுகளாக மயிலாப்பூர் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. சிறப்பாக செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் தேவநாதன் 525 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் டெபாசிட்தாரர்களுக்கு மயிலாப்பூர் நிதி நிறுவனம் சார்பாக தேவநாதன் அளித்த காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. 525 கோடி மோசடி புகார் குறித்து தேவநாதன் விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.