நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து அவிநாசியில் தேர்தல் பரப்புரையில் சீமான் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், வாக்களிக்க எதற்கு பணம்? பணம் கொடுத்து வாக்கு பெறுபவர் சேவை செய்வாரா? 500 ரூபாயை கொடுத்து 500 கோடியை எடுப்பது தான் இன்றைய அரசியல்.

தூண்டிலில் புழுவை போட்டு மீன் எடுப்பது போல மாறிவிட்டது. உடலையும் லஞ்சத்தையும் ஒழிக்க வேண்டும். இங்கு யாருக்கும் கொள்கை கோட்பாடு இல்லை. ஆகவே தான் தனித்து களம் காண்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.