கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ் டி குமார் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே அதிமுகவை கர்நாடகாவில் செயல்படுத்தி வருவதாகவும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இவர் என் ராஜினாமா அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.