கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் நாளை நவம்பர் 15ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்னும் கனமடை தொடர்ந்து வருவதால் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்திலும் விடுமுறை குறித்த அறிவிப்பு நாளை வெளியாகலாம்.