கேரள மாநிலம் காசர்கோடு அருகே உப்பெல்லாவில் வீட்டில் வரண்டாவில் ஒன்றரை வயது குழந்தை ஜீசன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தையின் தாத்தா காரை பார்க்கிங் செய்து கொண்டிருந்தார். கார் முன்பாக நின்று கொண்டிருந்த குழந்தையை கவனிக்காத அவர் குழந்தை மீது காரை ஏற்றினார். அதன் பிறகு குழந்தையின் அழுகுரல் கேட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது. தற்போது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி பலரையும் பதர வைத்துள்ளது.