குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் உள்ள வசந்த் விகார் குடியிருப்பின் தரைத்தளத்தில் ஆறு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவன் லிஃப்ட்டுக்குள் செல்ல முயன்ற போது லிஃப்ட் கதவு திடீரென அடைத்து சிறுவனின் தலை சிக்கிக்கொண்டது.

முதல் தளத்திற்கும் தரைதளத்திற்கும் இடையில் லிஃப்ட் சிக்கிக் கொண்டதால் சிறுவனை குடியிருப்பு வாசிகளால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்து விட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லிஃப்ட் பழுதானது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.