திண்டுக்கல் வேடசந்தூரில் திமுக தெற்கு செயலாளர் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில் பாலாஜிக்காக 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களில் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் சாமிநாதன் வீட்டில் சோதனை நடக்கிறது. ஏற்கனவே, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை தொடர்கிறது.