தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் வடசென்னை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது திமுக மற்றும் அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திமுகவின் கலாநிதியும், அதிமுகவின் ராயபுரம் மனோவும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். திமுக வேட்பாளர் மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் வாங்க முற்பட்டபோது அதிமுகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் மனுவை முதலில் வாங்க வேண்டும் என கூறி கூச்சலிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.