திமுக மற்றும் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் வேட்பு மனு தாக்கல் செய்ய காத்திருக்க வேண்டி இருந்ததாக வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், காவல்துறையினர் வழிமுறைகளைப் பின்பற்றி வேட்பாளர்களை அனுப்பாமல் அதிமுக மற்றும் திமுகவினரை ஒரே நேரத்தில் உள்ளே அனுமதித்தனர். இவர்கள் இருவருக்குள் நடந்த அமளியால் எங்களால் குறித்த நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார்