தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு 12 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 60 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, குமரி, நாகை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.