சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மானிய கோரிக்கையின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார். அதன்படி ஏழ்மை நிலையில் உள்ள சிறுபான்மையினருக்கு 2500 ரூபாய் மதிப்புள்ள விலையில்லா மின் மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரங்கள் 1.60 கோடி செலவில் வழங்கப்படும்.

பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், உறுப்பினர்களுக்கு, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.20,000-ல் இருந்து ரூ. 30,000-ஆக உயர்த்தப்படும். சென்னை, கோவையில் 2 புதிய சிறுபான்மையினர் கல்லூரி மாணவர்கள் விடுதி துவங்கப்படும் என அறிவித்துள்ளார்.