தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமை தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். நேற்று முதல் கட்டமாக குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்ட நிலையில் மீதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு இன்று ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. பணம் அனுப்பப்பட்ட உடன் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.