புதுக்கோட்டை, விராலிமலை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 4 பேரின் உடல்களை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்